இதற்கு என்ன பதில் சொல்ல்லாம் என்று எனக்கு தெரியவில்லை. தொழில்நுட்ப அடிப்படையில் பதில் கூறலாம், உதாரணமாக X-பங்கு 500 யை தாண்டினால் ரூ 600, 700 செல்லாளாம். ஆனால் இந்த பதில் அவர்களுக்கு போதுமானதாக இருக்குமா என்றால் இல்லை அவர்களின் அடுத்த கேள்வி எப்பொழுது 500 யை தாண்டும் அதற்கு பதில் அந்த பங்கிற்கு தேவை (Demand) ஏற்படும் பொழுது. அவர்களின் அடுத்த கேள்வி எப்பொழுது தேவை ஏற்படும். என்னிடம் பதில் இல்லை.

என் தந்தையின் நண்பர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வரும் சமயங்களில், பல சந்தர்ப்பங்களில் கிழ்வரும் சம்பவத்தை சொல்லி இருக்கிறார் அதாவது அவர் அண்ணாநகர் பகுதியில் ஒரு நிலம் வாங்க முடிவு செய்து பேசி பதிவு அலுவளகத்திற்கு சென்ற போது அந்த நிலத்தை விற்பவர் நிலத்தின் விலை உடன் ரூ 100 அதிகமாக கேட்க இவர் கோபித்துக்கொண்டு திரும்பி வந்துவிட்டார் என்று. அது எவ்வளவுபெரிய முட்டாள்தனம் என்று புலம்புவார் ஒருவேளை அவர் அதிக விலை கொடுத்து அந்த நிலத்தை வாங்கி இருப்பதாக எடுத்து கொண்டால் அப்பொழுது அது அதிகவிலை ஆனால் இப்பொழுது? இது பார்க்க (அ) கேட்க ஒரு சாதாரண சம்பவமாக தெரியலாம் ஆனால் இது போல பல மனிதர்களின் அனுபவம் நமக்கு சில பாடங்களை சொல்கின்றன. எதற்க்கு எப்பொழுது தேவை (Demand) ஏற்படும் என்று சாதாரண மனிதனால் கணிக்க முடியாது.
இப்பொழுது அதிக விலையில் வாங்கி வைத்திருப்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடத்தை தரும். பங்கு சந்தைக்கு பதியதாக வருபவர்கள் அதிக விலையில் பங்குகளை வாங்கி மாட்டிக்கொள்வது ஒன்றும் புதியதல்ல. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.
பங்குசந்தையை பொருத்தவரை பணமோ, தொழில் நுட்பமோ முக்கியமல்ல தீர்க்கமான மனநிலைதான் முக்கியம். அதை அடைந்த மனிதர்களுக்கு வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment