Tuesday, June 8, 2010

நிஃப்டி?

பங்குசந்தையில் ஈடுபடும் மக்களின் தற்போதைய மிக முக்கியமான கேள்வி சந்தை எந்த திசையில் செல்லும். ஒரு நாள் 100 புள்ளிகள் சரிவு அடைகின்றது மறுநாள் 100 புள்ளிகள் ஏறுகின்றது. இதே தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த எட்டு மாதங்கள் சந்தை 4750 க்கும் 5300 க்கும் இடையில் கிட்டத்தட்ட 500 புள்ளிகளுக்கு இடையே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஒரே வருடத்தில் 90% மேலே ஏறிய சந்தை கிட்டத்தட்ட அதே கால அளவில் 15% க்கும் குறைவாக மேலே கிழே ஆட்டம் நடைபெற்று வருகின்றது.

வரைபடத்தை வைத்து கணிக்கும் பொழுது.



1. சந்தை oct -2009 ல் டிரெண்டு லைனை உடைத்துள்ளது.
2. மீண்டும் ஒருமுறை jan -2010 ல் டிரெண்டு லைனை உடைத்துள்ளது.
3. கிட்டத்தட்ட மூன்று மேல்நிலை தடைநிலைகளை உருவாக்கி உள்ளது.
4. இறங்கு முகத்திற்கான தடைநிலை மற்றும் தாங்குநிலைகளை கீழ்நேக்கியவாறு அமையப்பெற்றுள்ளது.
இவை அனைத்துமே தொழில்நுட்ப அடிப்படையில் சந்தைக்கு பாதகமான காரணிகள்.

செய்திகளின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எப்பொழுது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்பது தெரியவில்லை இவை அனைத்துயும் வைத்து பார்க்கும் பொழுது கடந்த பாரளுமன்ற தேர்தலில் முடிவு வெளியான சமயத்தில் வரைபடத்தில் ஏற்பட்ட இடைவெளியை கூடிய சீக்கிரம் சரிசெய்ய வாய்ப்புள்ளது. அதாவது நிஃப்டி 3600 வரை இறங்க வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். என்ன நடைபெற பொகின்றது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
---------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.