பங்குசந்தையை பற்றி புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் அதிலும் மிகமிக கடினமான ஒன்று தினசரிவணிகம். ஆனால் ஏன் அதிகமான மக்கள் தினசரி வணிகத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்?

மக்கள் எளிதாக தினமும் கையில் காசுபார்க்க ஆசைபடுகிறார்கள். அது 100 (அ) 50 ரூ யோ அதை பற்றி கவலைப்படுவதில்லை. தினசரி வணிகத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்கும் ஆவல் அந்த கணிப்பு சரியா, தவறா என்ற முடிவு அன்றே தெரிந்து விடுகிறது. அவர்களுடைய கணிப்பு சரி என்றால் அதில் கிடைக்கும் பூரிப்பு அதிகம். தவறு என்றால் சோகம், கோபம் அதிகம். இன்றைய தோல்வி நாளைய வெற்றியாக மாற்றத்துடிக்கிறார்கள் அது மட்டுமல்ல கையில் ஒரு லட்சம் ரூபாயை வைத்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பங்குகளை வாங்க முடிகிறது, லாபம் வந்தால் மிக அதிகம் நட்டமும் மிக அதிகம். ஆனால் பாவம் சராசரி தினசரி வணிகரின் மனநிலை குறைந்த லாபத்தை உடனே உறுதிசெய்து விடுவான். ஆனால் குறைந்த நட்டத்தை ஏற்க மனமில்லாமல் காத்திருப்பான் அவன் கைகாசு கரையும் வரை.
அனைத்து நாட்களும் பங்குசந்தையில் நிச்சயதன்மை அற்ற நாட்களாகும். என்றோ ஒரு நாள் அவனை மிக அதிக கஷ்டத்தில் (நஷ்டத்தில்) ஆழ்த்தி விடுகிறது. பிறகு அவன் சந்தையை எட்டி கூட பார்ப்பதில்லை. நிதானமான பயணம் என்றும் வெற்றியை தரும்.
-------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment