இந்த கேள்விக்கு பொதுவான பதில் மிக்ககுறைந்த விலையில் வாங்கி, மிக அதிக விலையில் விற்க வேண்டும். கேட்கும் பொழுது மிக எளிமையாக தெரியும். ஆனால் இதை கையாழுவது மிக கடினம்.

எது மிக குறைந்த விலை, எது மிக அதிக விலை என்பது யாருக்கும் தெரியாது. உதாரணத்திற்கு 100 ரூபாய்க்கு வர்த்தகமாகும் பங்கு X யை 80 ரூபாய்க்கு வந்தால் அது மிக குறைந்த விலை என்று வாங்கினால் அது மேலும் குறைந்து ரூ 60 க்கு செல்லும். இதே போல் X பங்கை ரூ100 க்கு விற்றால் அந்த பங்கு 120 ரூபாய்க்கு செல்லும். சரியாக மிக குறைந்த விலையில் வாங்கி மிக அதிக விலையில் விற்க ஏவராலும் முடியாது.
சரி நிலையற்ற இந்த பங்கு சந்தையில் ஒரு நிறுவன பங்கை வாங்க, விற்க எதை அளவுகோலாக எடுத்து கொள்வது, இதற்காக உறுவாக்கப்பட்டது தான் டிரெண்டு லைன் .
இது ஒரு மிக அற்புதமான தொழில்நுட்பமாகும். இதை பற்றி வரும் பதிவுகளில் காணலாம்.
-------------------------------------------------------------------------------------------------
3 comments:
சொல்லுங்க சொல்லுங்க,அதையும் கற்றுக்கொள்ளலாம்
வாழ்த்துக்கள் தொடருங்கள்
வடுவூர் குமார், kggouthaman வருகைக்கு நன்றி.
Post a Comment