Thursday, February 18, 2010

பங்குசந்தையின் தாரகமந்திரம்

உலகின் மிகப்பெரிய பணக்காரர் வாரன் பஃபட் (Warren Buffett) . பங்குசந்தையின் பிதாமகன் தனது 11வது வயதில் சிடுடிஸ் சர்வீஸஸ் (Cities Services) என்ற நிறுவனத்தின் பங்கை 38 டாலர் என்ற விலையில் வாங்கினார்.



அவர் வாங்கிய சிறிது காலத்தில் அது 28 டாலர் என்ற விலைக்கு விழ்ச்சி அடைந்தது. அவர் மிகவும் கவலையுடன் காத்திருந்தார் அந்த பங்கு 40 டாலர் வந்த உடன் விற்றுவிட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியேறினார். ஆனால் அந்த பங்கு 200 டாலர் வரை சென்றது அப்பொழுது தான் அவர் செய்த தவறு அவருக்கு புரிந்தது அதிலிருந்து ஒரு பாடம் கற்றார்.

முதலீடு செய்து மிகவும் பொறுமையாக காத்திருக்க ஆரம்பித்தார். இந்த அனுபவம் அவருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஏன் பங்குசந்தையில் ஈடுபடும் அனைவருக்கும் பொருந்தும். பொருமையும், காத்திருத்தலும் பங்குசந்தையின் மிக முக்கியமான தாரக மந்திரம்.

1 comment:

Sridhar R said...

வருகைக்கு நன்றி D.R.Ashok

Post a Comment

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.