ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் அவரவர் துறைக்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கும். அனைத்தையும் கண்டிப்பாக நிதிநிலை அறிக்கை நிறைவு செய்யப்போவதில்லை.

சரி இந்த வருடம் என்னவெல்லாம் இருக்கலாம்.
1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சில முயற்சிகள் கண்டிப்பக இருக்கும்.
2. கிராம்புற கட்டுமான வளர்ச்சிக்கு சில திட்டங்கள் இருக்கலாம்.
3. மின்சார பற்றாக்குறை போக்க அணுசக்தி, தொழில் மற்றும் கட்டுமான சம்மந்தமான சில திட்டங்கள் இருக்கலாம்.
4. கல்வி சிர்திருத்தம், சில நிதி ஒதுக்கீடுகள் இருக்கலாம்.
5. எல்லா நிதிநிலை அறிக்கையிலும் இடம் பெறும் புகையிலை பொருட்களுக்கு குறிப்பிட்ட வரிஉயர்வு இருக்கும்.
6. உரத்தொழிற்சாலைகளுக்கு சில சலுகைகள் இடம் பெறலாம்.
மேலும் தொழில்துறைக்கு கொடுத்து வந்த நிதி ஒத்துழைப்பு முழுவதுமாக திரும்ப பெறப்படுகிறதா அல்லது பகுதி அளவா என்பது தெரியும்.
NTPC, REC பொதுப்பணித்துறை நிறுவனங்களின் FPO தோல்விகளுக்கு என்ன பதில் என்பது தெரியும். நிதிபற்றகுறை பற்றியும். இன்னும் சில அதிர்ச்சிகளும், சந்தோஷங்களும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் பங்குசந்தை எப்படி பார்க்கப்போகிறது என்பது தான் முக்கியம்.
தொழில்நுட்பத்தை வைத்து பார்க்கும்பொழுது துபாய்கடன் சம்பந்தமாக செய்திவந்த சமயம் சந்தை 4538 புள்ளிவரை சரிந்தது. அது உடைபடாமல் இருந்தால் மேல்.
சிறுவணிகர்கள் FNO தவிர்ப்பது நல்லது.